பதிவு செய்த நாள்
14
மார்
2012
10:03
உடுமலை : உடுமலை இந்து மக்கள் கட்சி (தமிழகம்) ஆலய விடுதலை போராட்டக்குழுவின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆண்டியூரில் நடந்தது. மாநில செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் லோக முருகன் முன்னிலை வகித்தார். இந்து பொது தொழிலாளர் சங்கம் பாரத் செந்தில், மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியம், செயலாளர் பொன்னுசாமி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில், "உடுமலை, ஆனைமலை, மடத்துக்குளம், காரத்தொழுவு பகுதியிலுள்ள கோவில்களில் ஆக்கிரமிப்புள்ள நிலங்களை மீட்க வேண்டும். மைவாடி லட்சுமி நரசிம்ம பெருமாள், காணாமல் போன சிந்திலுப்பு வெங்கடேசப்பெருமாள் கோவில், கரட்டூர் சஞ்சிவ் பெருமாள் கோவில், பெதப்பம்பட்டி கண்டியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பழமை வாய்ந்த கோவில்கள் பாரமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகின்றன. இக்கோவில்களை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், ஆன்மிக உணர்வு உள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். கோவில்களில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகளில், சினிமா சம்பந்தப்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞரணி தலைவர் ஈஸ்வரன், மணி, செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.