Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் குளம் ... மண்டுகாளியம்மன் கோயில் பூக்குழி விழா மண்டுகாளியம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
63 நாயன்மார்கள் சிலை பிரதிஷ்டை எப்போது?
எழுத்தின் அளவு:
63 நாயன்மார்கள் சிலை பிரதிஷ்டை எப்போது?

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2019
11:06

கொளத்துாரில், 800 ஆண்டுகள் பழமையான, சோமநாத சுவாமி கோவிலில், 63 நாயன்மார்கள் சிலைகள் நிறுவ, பக்தர்கள், மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கொளத்துாரில், 800 ஆண்டுகள் பழமையான, அமுதாம்பிகை உடனுறை, சோமநாத சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, மாதவ சிவஞான முனிவர் இயற்றிய, அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் நுாலில், இக்கோவிலைப் பற்றிய பதிவுகள் உள்ளன. இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவோருக்கு, சந்திரதோஷம் நிவர்த்தி ஆகும் என்ற ஐதீகம் உள்ளது. கோவிலின் வலதுபுறம், 65 அடி நீள சன்னிதியில், கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் என்பவர், 63 நாயன்மார்கள் சிலை நிறுவ, ஹிந்து அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். இதையடுத்து, 2016ல், 1.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 63 நாயன்மார்கள் சிலை பிரதிஷ்டை செய்ய, அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலை சுற்றி வருவதற்கு, இடம் இல்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிலைகள் மூன்று ஆண்டுகளாக, பிரதிஷ்டை செய்ய முடியாமல், கோவிலில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளன.


இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: சிலைகள் செய்ய, 2.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. ஆனால், காழ்ப்புணர்ச்சியால் சிலர், சிலைகள் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், ஹிந்து அறநிலையத் துறை அனுமதி வழங்கிய பிறகும், நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால் மூன்றுஆண்டுகளாக, சிலைகள் பிரதிஷ்டை செய்ய, போராடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar