Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டிய வரம் கிட்டச்செய்யும் விரதம் காஞ்சி பெரியவர் உபதேசங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எனக்கு பிடித்த நல்லநாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
05:07

காஞ்சிப்பெரியவரின் பக்தர்கள் சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். சுவாமிகளுக்கு பிடித்த பண்டிகை எதுவாக இருக்கும் என்பது குறித்து பேச்சு எழுந்தது. “மகாபெரியவருக்கு மகர சங்கராந்தியான பொங்கலைத் தான் பிடிக்கும். சூரியனுக்குரிய பண்டிகை  அது. காயத்ரி மந்திரமே சூரிய உபாசனையாகத் தானே சொல்லப்படுகிறது?’ என்றார் ஒருவர்.  “தீபாவளிதான் பிடிக்கும். நரகாசுரனை வதம் செய்த நாள் அல்லவா அது? பத்திரிகைகள் வெளியிடும் தீபாவளி மலருக்கு ஆண்டுதோறும் ஆசியுரை தருகிறாரே?” என்றார் மற்றொருவர்.  “ராம நவமியைத்தான் விரும்புவார். ஏனெனில் ராம நாமத்தின் மகிமையை சகஸ்ரநாமத்தில் சிவபெருமானே சொல்லியிருக்கிறாரே?” என்றார் வேறொருவர்.
 
“பொக்கிஷமான பகவத்கீதையை உபதேசித்த கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமிதான் விருப்பமானதாக இருக்கும்” என்றார் நாலாவது நபர். “காமாட்சியை உபாசிப்பதால் சுவாமிகளுக்கு நவராத்திரிதான் பிடித்த பண்டிகை” என்றார் ஐந்தாமவர். சுவாமிகளிடம் நேரில் கேட்டால்தான் உண்மை புரியும் என்ற எண்ணத்துடன் மடத்திற்கு வந்தனர். அப்போது சுவாமிகளும் ஓய்வாக அமர்ந்திருந்தார்.  “சுவாமிகளுக்கு மிக பிடித்த பண்டிகை எது என்பதை அறிய எங்களுக்கு ஆசை?” என தெரிவித்தனர்.  கலகலவென்று சிரித்தபடி  ’சங்கர ஜெயந்தி தான் எனக்கு அதிகம் பிடித்த பண்டிகை” என்றார் சுவாமிகள். பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.  “நீங்கள் எதிர்பார்த்த பொங்கல், தீபாவளி எல்லாம் முக்கிய பண்டிகைகள் தான். ஆனால் ஆதிசங்கரர்  அவதரிக்காவிட்டால், நாம் கொண்டாடும் பண்டிகைகள் எதுவும் இருந்திருக்காது. நம் சனாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டி ’ஷண்மத ஸ்தாபனம்’ செய்து, பண்டிகை கொண்டாட வழிவகுத்தவர் சங்கரர் தான். எனவே அவர் அவதரித்த சங்கர ஜெயந்திதான் எனக்கு பிடித்தமான நாள்” என்றார். பக்தர்களும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். - திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar