Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி வெங்கடேஸ்வர பெருமாள் ... ஆத்தூர் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகை மாரியம்மன் கோவில் கட்டுமான பணி: தடுத்து நிறுத்திய அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2019
02:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், கிராம மக்கள்  கோவில் கட்டுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில்,  ரேணுகை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இடிக்கப்பட்டு, தற்போது  ஊர் மக்கள் சார்பில் அந்த இடத்தில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா  மண்டபம் மற்றும் கோபுரம் போன்றவை கட்டும் பணிநடந்து வருகிறது. கடந்த  சில மாதங்களுக்கு முன்பு, இக்கோவில் அருணாசலே ஸ்வரர் கோவில்  நிர்வாகத்திற்கு உட்பட்டது என்று நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அறிவிப்பு  பலகையை அகற்றவும், இது ஊர் கோவில் என்று அருணாசலேஸ்வரர் கோவில்  நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில், கோவிலில் கட்டுமான பணிகள்  நடந்து வருவதையறிந்த, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர்  ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நடந்திருந்த  பணியை நிறுத்தும்படி கூறினர். அப்பகுதி மக்கள் திரண்டு, இணை ஆணையரிடம்  ஏன்? பணியை நிறுத்த வேண்டும்; இது ஊருக்கு சொந்தமான கோவில். மூன்று  தலைமுறைகளாக வழிபட்டு வருகிறோம். கிரிவலப்பாதையில் இருப்பதால்,  இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில்  அல்ல என்றனர்.

இது குறித்து ஞானசேகரன் கூறுகையில், ” இந்த கோவில், அருணாசலேஸ்வரர்  கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. கட்டுமான பணிகள் செய்ய  அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல்  பழைய கோவில் இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை தாலுகா  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோவில் கட்டுமான பணிகள்  நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்வசத்தின் 2-ஆம் நாளான  ... மேலும்
 
temple news
கோவை; பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிகப்பு, பச்சை வைர கற்கள் பதித்த ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar