Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி வெங்கடேஸ்வர பெருமாள் ... ஆத்தூர் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகை மாரியம்மன் கோவில் கட்டுமான பணி: தடுத்து நிறுத்திய அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2019
02:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், கிராம மக்கள்  கோவில் கட்டுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில்,  ரேணுகை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இடிக்கப்பட்டு, தற்போது  ஊர் மக்கள் சார்பில் அந்த இடத்தில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா  மண்டபம் மற்றும் கோபுரம் போன்றவை கட்டும் பணிநடந்து வருகிறது. கடந்த  சில மாதங்களுக்கு முன்பு, இக்கோவில் அருணாசலே ஸ்வரர் கோவில்  நிர்வாகத்திற்கு உட்பட்டது என்று நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அறிவிப்பு  பலகையை அகற்றவும், இது ஊர் கோவில் என்று அருணாசலேஸ்வரர் கோவில்  நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில், கோவிலில் கட்டுமான பணிகள்  நடந்து வருவதையறிந்த, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர்  ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நடந்திருந்த  பணியை நிறுத்தும்படி கூறினர். அப்பகுதி மக்கள் திரண்டு, இணை ஆணையரிடம்  ஏன்? பணியை நிறுத்த வேண்டும்; இது ஊருக்கு சொந்தமான கோவில். மூன்று  தலைமுறைகளாக வழிபட்டு வருகிறோம். கிரிவலப்பாதையில் இருப்பதால்,  இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில்  அல்ல என்றனர்.

இது குறித்து ஞானசேகரன் கூறுகையில், ” இந்த கோவில், அருணாசலேஸ்வரர்  கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. கட்டுமான பணிகள் செய்ய  அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல்  பழைய கோவில் இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை தாலுகா  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோவில் கட்டுமான பணிகள்  நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar