Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓசூர் எல்லம்மா தேவி கோவில் ... நாமக்கல் அருகே ஏழூர் கைலாசநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் நரசிம்மர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: அளவீடு செய்த நாமக்கல் அதிகாரிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
03:07

நாமக்கல்: ”நாமக்கல் நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான, 484 சதுரஅடி நிலம்  ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது,” என, திருத்தொண்டர்கள் சபை தலைவர்  ராதாகிருஷ்ணன் கூறினார்.

’நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சொந்தமான நிலம்  அபகரிக்கப்பட் டுள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என,  சேலம் மாவட்டம், வீராணம் அல்லிக்குட்டை திருத்தொண்டர்கள் சபை தலைவர்  ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதி மன்றத்தில், மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற  உத்தரவுப்படி, நரசிம்மர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், இந்து சமய  அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) குமரவேல், நகராட்சி ஆணையாளர்  சுதா மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், ஆஞ்சநேயர் கோவில் வீதியில், நில  அளவீடு செய்யும் பணியை, நேற்று (ஜூலை., 9ல்) மேற்கொண்டனர்.

இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: நரசிம்மர் கோவிலுக்கு  சொந்த மான அனைத்து சொத்துகளும் நில அளவை செய்யப்படுகின்றன.  இன்றைய அளவையின் போது, கோவிலுக்கு சொந்தமான, 484 சதுரடி  அபகரிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பழைய ஆவணப்படி, 68 சென்ட்  இருந்துள்ளது. தற்போதைய அளவைப்படி, 60 சென்ட் இருப்ப தாக தெரிகிறது.  வரைபட அளவில், நான்கு எல்லைகள் சரியாக இருக்கின்றன. ’அ’ பதிவே ட்டில்,  தவறுதலாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆய்வு செய்த விபரங்கள், உயர்நீதி  மன்றத்தில், நாளை (இன்று) (ஜூலை., 9,10ல்) தாக்கல் செய்யப்படும். தமிழக அளவில், அறநிலையத்துறை ஆவணப்படி, 4.75 லட்சம் ஏக்கர் நிலம் திருக்கோவிலுக்கு சொந்தமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலம், 70 சதவீதம் அளவுக்கு ஆக்கிரமிப்பில் உள்ளன. அதுதவிர, 1.50 லட்சம் ஏக்கர் நிலங்கள், அரசு கோவில் புறம்போக்கு நிலமாக உள்ளது. கட்டளைக்கு உரிய நிலங்கள், 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. தமிழக அரசுக்கு அவ்வளவு நிலங்கள் சொந்தமாக இல்லை. அவற்றை ஒருங்கிணைத்து, நல்ல நிலையில் மேம்படுத்தும்போது, அரசுக்கு, மதுபானம் மூலம் கிடைக்கின்ற வருமானம் முகாந்திரமே இருக்காது.  

அறநிலையத்துறை நிர்வாகத்தின் வருமானம் மூலமே, அனைத்து வகையான  நலத்திட்டங் களையும் செயல்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar