Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... திருத்தணி கோவிலில் ஆடி கிருத்திகை விழா திருத்தணி கோவிலில் ஆடி கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் அருகே கீழடி இரட்டைச்சுவர் தொடர்ச்சி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருப்புவனம் அருகே கீழடி இரட்டைச்சுவர் தொடர்ச்சி கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
11:07

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் இரட்டைச்சுவரின் தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் 47 லட்ச ரூபாய் செலவில் 5ம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 13ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதில் முருகேசன் என்பவரது நிலத்தில் பண்டைய கால இரட்டைச்சுவர் கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியை கண்டறிய ஜி.பி.ஆர்., கருவி மூலம் ஆய்வு நடத்தப்பட்டபின் கூடுதலாக ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரட்டைச்சுவரின் வடகிழக்கு பகுதி யில் அதன் தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.சுவர்களில் உள்ள கற்கள் சரிந்த நிலையில் கட்டட சுவர் கிடைக்கப்பெற்றுள்ளது. தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த கட்டடத்தின் சுவர் மொத்தம் 40 மீட்டர் நீளம் இருக்க வாய்ப்புள்ளது. முழு அளவிலான செங்கற்களை பயன்படுத்தி கட்டுமானம் செய்துள்ளனர். ஒவ்வொரு செங்கல்லும் 30 செ.மீ., நீளமும், 11 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது. தற்போதைய கட்டட அமைப்பு பிடிமானத்திற்காக செங்கற்களை உடைத்து இடையிடையே சிறுசிறு செங்கற்கள் வைப்பது வழக்கம்.ஆனால் சங்க கால கட்டடத்தில் செங்கல் அனைத்தும் முழுமையாக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து கட்டம் கட்டியுள்ளனர். எப்படி கட்டடம் பிடிமானம் இன்றி நிலையாக இருந்தது என தெரியவில்லை. காவிரி பூம்பட்டினம் பகுதியில் கிடைத்த சுவருக்கும், கீழடி சுவருக்கும் ஒற்றுமை உள்ளது. கீழடியில் இதுவரை கிடைத்த சுவரின் கட்டுமானத்தை பார்க்கும் போது இது நீளவாக்கில் கட்டப்பட்ட பெரிய சுவர் என தெரியவருகிறது. முழுமை யாக கிடைத்தபின் தான் அதனுடைய பயன்பாடு குறித்து தெரிய வரும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar