பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
12:07
பல்லடம்:பல்லடத்தை அடுத்த வதம்பச்சேரி நல்லூர்பாளையத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் விழா துவங்கியது. அழகு நாச்சியம்மனின் ஜென்ம நட்சத்திரத்தில், துர்க்கை ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு திர வியங்களால், அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது.மூலவர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, படையல் வைக்கப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. அழகு நாச்சியம்மன், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.