பதிவு செய்த நாள்
02
ஆக
2019
03:08
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, அர்த்த ஜாம பூஜை நடந்தது.ஆடி அமாவாசையையொட்டி, சிதம்பரம் தில்லைகாளி அம்மன் கோவிலில், அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில் தில்லை காளியம்மனுக்கு, சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்ம சாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிபாடு நடந்தது.தில்லை காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலக் காப்பு, பால், தயிர், பழம், வாசனை திரவியங்கள் போன்ற பொருள்களால் மகா அபிஷே கம் நடந்தது.அம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், செவ்வரளி பூ அலங் காரத்தில், சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா தீபாராதனை நடந்தது.