Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
’பகவானை அடைய பக்தியே வழி’ கோவையில் புனித பயணத்துக்கு அரசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2019
04:08

உடுமலை:ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக  அலங்கார பூஜைகள் நடக்கிறது. நாளை, ஆடிப்பூரத்தையொட்டி, உடுமலை பகுதி,  கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. உடுமலை தளி ரோடு காமாட்சி அம்மன்  கோவிலில், ஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவ விழா நடக்கிறது. நாளை, காலை, 7:00  மணிக்கு கணபதி ஹோமம், அம்பாளுக்கு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம்  நடக்கிறது.

தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரத்தில்  ஆடிப்பூர ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில்,  இன்று காலை, 7:30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து லட்சார்ச்சனை நடக்கிறது.  நாளை, மாலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன், ஊஞ்சல்  உற்சவம் நடக்கிறது.

குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் இன்றும், நாளையும் (ஆக., 2 மற்றும் 3ல்) நடக்கிறது. இன்று (ஆக., 2ல்) காலை, 7:00 மணிக்கு குபேர லட்சுமி ஹோமம், பூமிலட்சுமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சுவாமிகளின் திருக்கல்யாண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக., 3ல்) காலை, 7:00 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

இரவு, 8:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.உடுமலை, பிரசன்ன விநாயகர்  கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், நவநீத கிருஷ்ண பெருமாள்  கோவில்களிலும் ஆடிப்பூர விழா மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில்  ஆடிபெருக்கு விழா சிறப்பு பூஜைகள் நாளை, காலை, 7:00 மணி முதல்  நடக்கிறது.நீர்நிலை வழிபாடு: உடுமலை பகுதி கிராங்களில் நாளை ஆடிப்பெருக்கு  விழாவையொட்டி நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அதன்படி  அமராவதி ஆற்று நீரில் முளைப்பாரி விட்டு வழிபாடு நடத்துவார்கள். மேலும்  கிராமங்களில் மரங்களில் துாரி கட்டி பெண்கள் குழந்தைகள் விளையாடுவதும்  பாரம்பரியமாக நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ முன்னிட்டு சிவாச்சாரியார் ... மேலும்
 
temple news
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
கோவை;  மார்கழி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar