மதுரை ஆவணி மூலத்திருவிழா: குன்றத்து முருகன் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2019 11:09
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டிய ராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பட்டார்.
இதையொட்டி கோயிலில் கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின் சர்வ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வழிநெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாலித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றார். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு நடந்தது. இரவு நரியை பரியாக்கும் லீலையில் பங்கேற்றார். புட்டுக்கு மண் சுமந்தது, விறகு விற்ற லீலையில் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொள்கிறார். செப்., 12 ஆடிவீதி உலா முடிந்து 16 கால் மண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம் சுவாமி, தெய்வானை விடைபெறுதல் நடக்கிறது. செப்., 13 சுவாமி பூ பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவார். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயிலில் நடை திறப்பு, பூஜை நடக்கும்.