சந்திரயான் - 2 வெற்றி பெற கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2019 12:09
சந்திரயான் - 2 வெற்றி பெற வேண்டி கோவை ராமநாதபுரம் ரோட்டில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர். 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
சந்திரயான் - 2 வெற்றிகரமாக நிலவில் இறங்கி செயல்பட வேண்டி, திங்களூர் சந்திரன் கோவிலில் மற்றும் கோவை, ராமநாதபுரம் ரோட்டில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் பொதுமக்கள், பக்தர்கள், திரளாக தரிசனம் செய்தனர்.