பதிவு செய்த நாள்
08
அக்
2019
02:10
தர்மபுரி: சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று 7ல் காலை, 6:00 மணி முதல், கோட்டை கல்யாண காமாட்சி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில், கல்யாண காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். இதே போன்று, கடைவீதி, அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத, மருவானேஸ்வரர் கோவில் நடந்த சிறப்பு பூஜையில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவில் நேற்று 7ல் மாலை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், அம்மன் சிறப்பு அலங்காரத் தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெசவாளர் நகர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போன்று, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில் களில் சரஸ்வதி, ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தன.