விழுப்புரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2019 03:10
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த நந்திவாடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 99ம் ஆண்டு விஜயதசமி சஸ்திர பூஜை நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் 8ம் தேதி காலை 8:30 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ் சனம், பகல் 12:00 மணிக்கு ஆஞ்சநேயா ஸ்ஹஸ்ரநாம அர்ச்சனை, துாப, தீப அலங்காராதனை சேவை நடந்தது.மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை சஸ்த்திர ஆரோகணம், இரவு 7:00 மணிக்குமேல் பெருமாள் வீதியுலா திருக்கோலம் நடந்தது.ஏற்பாடுகளை, நந்திவாடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.