தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய புண்ணியத்தை வீட்டிலேயே பெற முடியும். இதனடிப்படையில் ஒருவருக்கொருவர் ’கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று கேட்கும் வழக்கம் தீபாவளியில் உண்டானது. முற்றும் துறந்த முனிவருக்கும் தீபாவளி குளியல் அவசியம். கங்கா ஸ்நானத்தால் நம் பாவம் நீங்கி புனிதம் அடைகிறோம்.