பதிவு செய்த நாள்
08
நவ
2019
01:11
கோவை:பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையத்தில், இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம், வரும் 10ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நடக்கிறது.
பிரார்த்தனை கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எலைசா பிளசிங், குளோரி ரவிக்குமார், பால் சத்தியன், நவீன் சுந்தர் கூறியதாவது:பிரார்த்தனை கூட்டத்தில், இயேசு அழைக்கிறார் நிறு வனர் ஸ்டெல்லா தினகரன், சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். காருண்யா மாணவ, மாணவி யரின் சிறப்பு பாடல்களும் இடம்பெறுகின்றன.
கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக, வரும் 10ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு, பிரஸ்காலனி(பஸ்ஸ்டாப்), மேட்டுப்பாளையம்(சிவரஞ்சனி தியேட்டர்), மதுக் கரை (மரப் பாலம்), ஒண்டிப்புதுார்(ஜோசப் பள்ளி), துடியலுார்(பஸ் ஸ்டாண்ட்), சிட்ரா(பஸ் ஸ்டாப்), சரவணம்பட்டி(கஸ்துாரி சூப்பர் மார்க்கெட்), கிணத்துக்கடவு(டி.இ.எல்.சி., சர்ச்), கணபதி (ஜெபகோபுரம்), சிங்காநல்லுார், காந்திபுரம் மற்றும் போத்தனுாரில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காந்திபுரம் - காருண்யா நகர், காருண்யா நகர் - காந்திபுரத்துக்கு, அதி காலை முதல் இரவு வரை அரசு பஸ் வசதி உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.