கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது வடமதுரை மீனாட்சியம்மன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2019 01:11
வடமதுரை,: வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் திருப்பணி செய்வதற்கான ஆய்வு பணி நேற்று நடந்தது.தமிழ்நாட்டில் பல கோயில்கள் சிதிலமடைந்து பராமரிப்பு, கால முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து இதற்காக ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவிடம் வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களை தயார் செய்யும் பொருட்டு நேற்று செயல் அலுவலர் நாராயிணி தலைமையில் ஆய்வு நடந்தது. மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர், சுப்பிரமணியசுவாமி சன்னதிகள் உள்பட அனைத்து கோயில்களின் தற்போதைய நிலை புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டன.இக்கோயிலில் திருப்பணி செய்ய ஆவலாக இருக்கும் உள்ளூர் பிரமுகர்களும் பங்கேற்றனர். அவர்கள் கூறுகையில், பல கோயில்களிலும் காலமுறையில் திருப்பணி நடந்து கும்பாபிஷே கங்கள் நடக்கக்கின்றன. ஆனால் சில நுாற்றாண்டுகளை கடந்த மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் திருப்பணி நடக்காமல் தாமதமாவது வேதனைக்குரியது. இக்கோயில் திருப்பணியில் பங்கேற்க பல நன்கொடையாளர்கள் தயாராக உள்ளனர். விரைவாக நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்று தர வேண்டும் என்றனர்.