மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலைய செட்டிநாடு சுவர் பூச்சால் புதுப்பொலிவு ஏற்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் 12 தொன்மையான வரலாற்று சின்னங்களை பாதுகாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதில் மதுரை திருமலை நாயக்கர் மகால் பராமரிப்புக்கு ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாலை பழமை மாறாது புதுப்பிக்கும் பணி துவங்கியது.
வர்ணம் பூசும் பணிக்காக ஏற்கனவே உள்ள சுண்ணாம்பை சுரண்டும் பணி நடக்கிறது. இது நிறைவு பெற்றதும் கண்களை கவருவதாக செட்டிநாடு சுண்ணாம்பு பூசப்பட உள்ளது. ஆங்காங்கு சுவரில் ஏற்பட்டுள்ள கீறல், வெடிப்பு, பெயர்ந்து விழுந்த பகுதிகளில் மராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரூ.3 கோடியில் புதுப்பிக்கும் பணி நடக் கிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான புறாக்கள் அடைகின்றன. இவற்றின் எச்சத் தால் மகால் அசுத்தமாகிறது. இது பராமரிப்புக்கு தலைவலியாக உள்ளது.புறாக்கள் நுழையா மல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 150 இடங்களில் ஜன்னல், நுழைவு பகுதியில் தடுப்பு வலைகள் பொருத்தப் படுகின்றன, என்றார்.