சிவன் வேறு முருகன் வேறு அல்ல. சிவனின்
மறுவடிவே முருகன். அன்னை பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை.
சூரபத்மனுடன் போர் புரிய சென்ற போது தாயிடம் ஆசி பெற்றார் முருகன். தன்
சக்தியெல்லாம் ஒன்று திரட்டி வேலாக்கி கொடுத்தாள் பார்வதி. இந்த சக்திவேல்
இல்லாமல் முருகன் காட்சி தருவதில்லை. வேலுடன் போரிட்ட முருகனே சூரனை வதம்
செய்து வாகை சூடினார். ‘வேல்’ என்றால் வெற்றி. முருகனை வழிபடுவோரை தீ
வினை தீண்டாது. முருகனை தரிசித்தால் பிறவித்துன்பம் நீங்கும். நோய்,
முன்வினை, பாவம், பகை தீரும். மரண பயம் ஒழியும்.