பதிவு செய்த நாள்
28
பிப்
2020
11:02
வல்லக்கோட்டை கோவில் குளத்தைச் சுற்றி, மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் அருகே வல்லக்கோட்டையில், பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இங்கு, 7 அடி உயரத்தில், முருகபெருமான், பக்தா்களுக்கு அருள் பாலிகிறாா். காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில்
இருந்து, ஏராளமான பக்தர்கள், விஷேச நாட்களில் வந்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், இந்த கோவில் குளக்கரைச் சுற்றி, ஒரு இடத்தில்கூட, மின்விளக்கு இல்லை. இதனால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:
கோவிலுக்கு, மாலையில் வரும் பக்தர்கள், குளத்தில் உள்ள தீர்த்தத்தில்
கால் நனைத்து, நீரை தலையில் தெளித்து கொள்வது வழக்கம். மின் மின்விளக்கு இல்லாததால், போதிய வெளிச்சமின்றி, குளத்தில் இறங்கவே அச்சமாக உள்ளது.
தற்போது, குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அசம்பாவிதம்
நிகழும்முன், குளக்கரையை சுற்றி மின்விளக்குகள் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.