பதிவு செய்த நாள்
15
செப்
2020
10:09
சென்னை: சென்னை நகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு, இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக, சென்னை புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், 5 மாதங்களுக்கு பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்காததால், பிரதோஷ வழிபாடு, தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி, சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு, இன்று மாலை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.