பதிவு செய்த நாள்
11
ஆக
2022
01:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வெளியில், இருசக்கரம் தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.பக்தர்களின் வாகனங்கள், கோவில் கோபுரம் பகுதி வரை செல்வதால், கோவில் இருக்கும் சன்னிதி தெருவில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நடைபாதை கடைகள் இருந்ததால் நடந்து செல்ல முடியாமல், பாதசாரிகள் சிரமப்பட்டனர்.இதையடுத்து, கோவில் சன்னிதி தெருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஹைட்ராலிக் தடுப்பு அமைக்கப்பட்டது.முக்கிய பிரமுகர்களின் கார் செல்லும்போது மட்டும், சென்சார் வாயிலாக திறந்து விடும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது. இதை ஒட்டியிருந்த மழை நீர் கால்வாய் தண்ணீர், ஹைட்ராலிக் தடுப்பை இயக்கும் இயந்திரத்திற்குள் சென்றதால், சில மாதங்களுக்கு முன் பழுதானது. இந்நிலையில், கோவிலை சுற்றிலும் மூன்று இடங்களில் அமைக்கப்பட்ட ஹைட்ராலிக் தடுப்பு சரி செய்யப்பட்டு, இருசக்கரம் வாகனம் தவிர்த்து, கார் மற்றும் பிற வாகனங்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு இயக்கும் பொறுப்பு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பு செயல்பாட்டுக்கு வந்ததால், காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, பக்தர்களுக்கு செல்லும் வகையில் விசாலமாக இருக்கிறது.