ஆக.,23ல் மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியின் திருவிளையாடல் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2022 01:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நடக்கும் ஆவணி மூலத் திருவிழா வரும் 23ல் துவங்குகிறது. காலை, மாலையில் அம்மனும், சுவாமியும் ஆவணி மூல வீதிகளில் வலம் வருகின்றனர்.
வரும் 23 காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. செப்., 7 வரை தினமும் சுவாமியின் திருவிளையாடல் நடத்தப்பட உள்ளது.வரும் 28ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்தது; 30ல் நாரைக்கு மோட்சம் அருளியது; 31ல் மாணிக்கம் விற்ற லீலை நடக்கிறது.செப்.,1ல் தருமிக்கு பொற்கிழி அருளியது; 2ல் உலவாக்கோட்டை அருளியது; 3ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது; அன்றிரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு லீலை நடக்கிறது.முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பட்டாபிஷேகம் செப்.,4 இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை வளையல் விற்ற லீலை நடக்கிறது.செப்., 5ல் நரியை பரியாக்கியது; 6ல் பிட்டுக்கு மண் சுமந்தது; 7ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. செப்., 8ல் சட்டத்தேர்; 9ல் தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.