Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி பவுர்ணமி கோவில்களில் சிறப்பு ... காளஹஸ்தியில் பக்த கண்ணப்பர் ஐக்கிய நாள் விழா : சிறப்பு அபிஷேக ஆராதனை காளஹஸ்தியில் பக்த கண்ணப்பர் ஐக்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா : 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா : 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு

பதிவு செய்த நாள்

07 மார்
2023
04:03

கேரளா மாநிலத்தில் பிரசித்திபெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவிலில்  நடைபெற்ற பொங்கல் விழாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட
 பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டு வழிபட்டனர்.

கேரளா மாநிலத்தில் பிரசித்த பெற்ற ஆலயங்களுள் மிகமுக்கியமானது திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவில் மதுரையை எரித்த  கண்ணகி குழந்தையாக கிள்ளியாற்றின் கரையில்  அவதரித்தநாளான மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பௌர்ணமி நாள் ஆற்றுகால் பொங்காலை திருவிழா நடைபெறுகிறது. மதுரையை எரித்த கோபத்திலிருந்த கண்ணகியை பெண்கள் பொங்கலிட்டு அமைதிபடுத்தி வழிபட்டனர் என்பது வரலாறு அதன் காரணமாக ஆண்டுதோறும் பலலட்சகணக்கான பெண்கள் விரதமிருந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனாஊரடங்கு காரணமாக பொது இடங்களில் பொங்கல் விழா நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்கல் விழா கடந்த மாதம் 27ம் தேதி காப்புகட்டி துவங்கியது. தொடர்ந்து இன்று பொங்கலிட்டு வழிபட்டனர். முன்னதாக ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் முன்பாக அமைக்கபட்டிருந்த பண்டார அடுப்பில் ஆலய மேல்சாந்தி ஈஸ்வரன் தம்பூதிரி தீமூட்டினார். இந்நிகழ்ச்சியில் கேரளா அமைச்சர்கள் அனில்,  சிவன்குட்டி , ஆன்றனி ராஜூ மற்றும் எம்பிகள் முரளீதரன், சசீதரூர்,ரஹீம் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்,முன்னாள் அமைச்சர் சிவகுமார் ,கேரளா காவல்துறை டிஜிபி அனில் காந்த்,உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகர பகுதிகளான தம்பானூர், மணக்காடு, கிழக்கேகோட்டா ,அம்பலதற, பாளையம் வெள்ளையம்பலம், சாக்கை ஈஞ்சக்கல் உட்பட நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பெண்கள் திரளாக குவிந்து சாலைகளிலும் வீட்டு வளாகங்களிலும் பொங்கலிட்டு வழிபட்டனர். சுமார் 25லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது குறிப்பிடதக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar