Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் ... மயிலாடுதுறை அருகே ஒரே நேரத்தில் 640 பசு மாடுகளுக்கு கோபூஜை! மயிலாடுதுறை அருகே ஒரே நேரத்தில் 640 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்களிலே பல நிறமுண்டு.. ஒவ்வொன்றிற்கும் ஒரு குணமுண்டு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
03:01

பொதுவாக இறைவழிபாட்டில் பழங்கள் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இதற்கு காரணம் .. உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் தரவல்லது பழங்கள். தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது.  பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.  அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது.  அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும்.  இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும்.  மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு கிடைக்கும்.

பழங்களில் பல நிறங்கள் உள்ளன.  அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை.  இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.

சிவப்பு நிறப் பழங்கள்: இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும். கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
மஞ்சள் நிறப் பழங்கள்: எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும். மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும். பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம்.  இது நரம்புத் தளர்வைப் போக்கும்.  மயக்கமுள்ளவர்களுக்கு உணர்வை உண்டாக்கும்.  மன அழுத்தத்தைப் போக்கும்.  ஜீரண சக்தியைக் கூட்டும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  குடல் புண்களை ஆற்றும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.  கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.  வாழைப்பழம் பொதுவாக  கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது.  குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும்.  அஜீரணத்தைக் குறைக்கும்.  கண் பார்வையைத் தெளிவாக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  முகப்பொலிவு கொடுக்கும்.

பச்சை நிறப் பழங்கள்: பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய்  போன்றவை அடங்கும். இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும்  உள்ளன.    உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.

ஆரஞ்சு நிறப் பழங்கள்: மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும். உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
 
நீல நிறப் பழங்கள்:
நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள்  நீல நிறப் பழங்களாகும்.  துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும்.  இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.  மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது. தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும்.  தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும்.  நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும்.  இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.

இவைதவிர..  சப்போட்டா பழம், விளாம்பழம் போன்றவை உடலுக்கு ஊக்கமளிக்கும்.  கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.  சீரண சக்தியைத் தூண்டும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  குடற்புண்களை ஆற்றும்.  வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். எனவே தான் வழிபாடுகளில் பழங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar