பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
10:06
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங், முதுகு தண்டுவட பிரச்சனைக்காக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்ள தனது மனைவியை காண, கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனி விமானம் மூலம் கோவை வந்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது மகன் ஆகியோர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். விநாயகர், மூலவர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜபெருமாள் ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவரது மனைவி சிகிச்சை பெற்று மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். மத்திய அமைச்சரின் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது நேரம், பக்தர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர்.