பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
10:06
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை (ஜூலை 1ம் தேதி) ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது.
ஈஷா அறக்கட்டளை நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு, தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக, உலகம் முழுவதிலும் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை (ஜூலை 1ம் தேதி) ஒரு நாள் மட்டும், ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி வளாகங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. ஜூலை 2ம் தேதி முதல் வழக்கம்போல அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.