பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
11:06
பிள்ளையார்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் பிள்ளையார்பட்டியில் நடந்த சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பிள்ளையார்பட்டியை சுற்றுலா மையமாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டத் தலைவர் வி.சிவகுமார் சாஸ்திரிகள் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி கிளை துணைத் தலைவர் எம்.சோமசுந்தரகுருக்கள் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஆர்.வைத்தியநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் கோவை ஆடிட்டர் சி.ஜி.வி.கணேசன் பதவி ஏற்பு பிரமாணம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பிள்ளையார்பட்டி டாக்டர் கி.பிச்சைக்குருக்கள், மதுரை பட்டாபிராமன், கவிதாயினி, அலமேலு முகுந்தன், மாவட்ட தலைவர் மஞ்சுநாதன், கோவை சுப்ரீம்சங்கர், மகளிரணி அமைப்பாளர் சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்ததினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பிள்ளையார்பட்டியை சுற்றி குன்றக்குடி,வைரவன்பட்டி,நேமம்,கீழச்சேவல்பட்டி,இரணியூர் இளையாத்தன்குடி ஆகிய வரலாறு சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. இதனால் பிள்ளையார்பட்டியை சுற்றுலாதலங்களின் மையமாக அறிவிக்குமாறு மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தியும், மத்திய,மாநில அரசு பயணியர் தங்கும் விடுதிகள், உணவகங்கள் கட்ட கோரியும், வளர்ச்சிப்பணிகளை அதிகரிக்க .பிள்ளையார்பட்டியை பேரூராட்சியாக அறிவிக்க கோரியும்,.மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.