ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூசாரிகள் தடுக்க வேண்டும் : ஆர்.ஆர்.கோபால்ஜி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2025 10:06
ராமேஸ்வரம்; கிராம கோயில் பூசாரிகள் ஆன்மிக போதனைகள் மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் வி.எச்.பி.,சார்பில் நடந்த கிராம கோயில் பூசாரிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்ற ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது : மதசார்பற்ற நம்நாட்டில் அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுதான் நம் பலவீனம், இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இன்று அரசியல்வாதிகள் கபிளீகரம் செய்கின்றனர். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த கால முதல் தற்போது வரை மதமாற்றம் நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். ஆகையால் கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். நம் மதத்தையும், கிராம கோயில் பூசாரிகளையும் இழிவுபடுத்த ஒரு கும்பல் அலைகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுதான் நீங்கள் நம் நாட்டிற்கு செய்ய தர்மம் என்றார்.