பொள்ளாச்சி : பொள்ளாச்சி சிவன் கோவில்களில் கேதார கவுரி விரதத்தையொட்டி சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஐப்பசி மாதம் தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசையன்று, கேதார கவுரி விரதமிருந்து, அம்மன் சமேதரான சிவபெருமானை வழிபட்டால், குடும்ப வாழ்வு செழித்து, மாங்கல்யம் நிலைக்கும் என்பது ஐதீகம்.நேற்று ஐப்பசி அமாவாசை என்பதால், பொள்ளாச்சி பகுதி சிவன் கோவில்களில் சுமங்கலி பெண்கள் விரதமிருந்து வழிபாடு செய்தனர். இதற்காக, மாக்கினாம்பட்டி சிவன் கோவிலில், அப்பகுதி சுமங்கலி பெண்கள் 21 மஞ்சள் கயிறுகளை கையில் கங்கணமாக கட்டி, முறைப்படி விரதமிருந்து, அம்மன் சமேதரான சிவபெருமானை 108 முறை கூட்டமாக வலம் வந்து வணங்கினர்.