மேலூர்: மண்ணில் புதைந்து வரும் மேலூர் பனங்காடி பெருமாள் கோவிலை அரசு புனரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இக்கோவில் கி.பி.13ம் நுõற்றாண் டில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாக தொல்லியல் துறை கூறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில் என்பதற்கு ஆதாரமாக, கோவிலில் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் உள்ளன. தவிர சுவாமி சிலைகளை உள்பிரகாரமாக சுற்றும் வசதியும் உள்ளது. மேலூர் தாலுகாவில் பெருமாளுக்குரிய தனிக்கோவில் என்பதால் பல்வேறு கிராம மக்கள் இங்கு வருகின்றனர். பராமரிப்பின்றி மண்ணிற்குள் கோவில் புதைந்து வருகிறது. அழகர்சாமி: பராமரிப்பின்றி மேல் தளம் சிதிலமடைந்து சுவாமி சிலைகள் மீது மழைநீர் ஒழுகி கட்டடம் சேதமடைந்து வருகிறது. தமிழ் பிராமிய கல்வெட்டுக்களும் புதைந்துவருகிறது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் அனிதா: வரலாற்று சிறப்புமிக்க கோவில் என்பதால், ரூ.13 லட்சத்தில் புரதான அமைப்பு மாறாமல் சரி செய்ய நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். நிதி கிடைத்தவுடன் விரைவில் சரி செய்யப்படும்.