திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2015 11:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோத்சவ விழாவில் தேகளீச பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக நேற்று முன்தினம் கருட சேவை நடந்தது. மாலை 4: 30 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 6.00 மணிக்கு தேகளீச பெருமாள் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு 11: 00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தேகளீச பெரு மாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வானவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5: 00 மணிக்கு சந்திர பிரபையில் சுவாமி வீதியுலா நடந்தது. இரவு 10:00 மணிக்கு யானை வாகனத்தில் வானவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.