காரைக்கால்:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரைக்கால்
கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அஷ்டதிக்பலி பூஜை, பஞ்சமூர்த்திகள்
யாகபூஜைகளுடன் மடவிளாக புறப்பாடும் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடந்தது. 27ம்
தேதி கயிலாசநாதர் பூத வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் பெரிய வீதி
புறப்பாடும் நடந்தது.28ம் தேதி யானை வாகனத்திலும், 29ம் தேதி சாகம்பரி
அம்பாள் திருக்கயிலையிலிருந்து வந்து சாமியை பூஜிக்கும் நிகழ்ச்சியும்,
அதைதொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் கயிலாசநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி
உலா நடந்தது. நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைகள் முடிந்து
பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை கயிலாசநாதர் பரதேச கோலம்
போதலும், பின் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் கைலாசநாதர் சுவாமி
அம்பாளும் பல்லக்கில் வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று தேர்ரோட்டம் நடக்கிறது.வரும்5ம் தேதி
அம்மையார் குளத்தில் தெப்ப திருவிழா நடக்கவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை
கோவில் தனி மற்றும் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.