ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா ஜூன் 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாயூரநாதசுவாமி, அஞ்சல்நாயகி அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இனிப்பு பலகாரங்கள் சுவாமிக்கு வைக்கப்பட்டு,பக்தி பாடல்கள் பாடப்பட்டன. கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன், மண்டகபடிதாரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கல்யாண விருந்தும் நடந்தது. சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.