பதிவு செய்த நாள்
28
ஜூலை
2015
10:07
சிதம்பரம்: சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தையொட்டி ஆயிரக்கனக்கான பக்தர்கள் அலகு குத்தியும், அங்கப்பி ரதட்சணம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 10ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று தீமிதி உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும், குழந்தைகளை தொட்டிலிட்டும், மாவிளக்கு போட்டும், பலர் பாலமன் கரையில் இருந்து செடல் காவடி, அந்தரத்தில் தொங்கு காவடி, சூலம் காவடி சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை அடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5 மணிக்கு அக்கினி சட்டி புறப்பாடு செய்து தீக்குண்டம் ஏற்றப்பட்டது. பின்னர் பூங்கரகம் வீதி உலாக்காட்சி நடைபெற்று , மாலை 6.15 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து அம்மன் தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.