தென்திருமலையில் பிரமோற்சவம்: மோகினி திருக்கோலத்தில் சுவாமி திருவீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2016 11:10
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பில் உள்ள தென்திருமலை ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், பிரமோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. தினமும் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் திருவீதி உலா வருகிறார். நேற்று காலை, ஸ்ரீவில்லிப்புத்துாரில் இருந்து கொண்டு வந்த ஆண்டாள் மாலை மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மோகினி திருக்கோலத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 8:30 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், மாலையில் தங்க ரதத்திலும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. திங்கள் கிழமை காலை தேரோட்டம் நடைபெறுகிறது.