கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பெண்களால் நன்மை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2016 10:10
நட்புக்கு முன்னுரிமை தரும் கும்ப ராசி அன்பர்களே!
புதன் நவ.4ல் இருந்தும், சுக்கிரன் நவ.8ல் இருந்தும் நன்மை அளிக்கத் தொடங்குவர். செவ்வாயால் அக்.25 வரை நன்மை அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். பெண்களின் வழியில் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. கடந்த மாதம் அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு இந்த மாதம் அடியோடு மறையும். சூரியனால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. சிலருக்கு அவப்பெயரும் உண்டாகலாம். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் நன்மை உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாட்டால் மனதில் மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படும். புதிய வீடு-, மனை வாங்க அதிர்ஷ்ட யோகம் கை கூடி வரும். அக்.18க்கு பிறகு மனதில் குழப்பம் உருவாகலாம். சிலர் வீண் பொல்லாப்பை சந்திக்கலாம். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவ.9,10ல் குடும்பத்துடன் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.4,5ல் அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். நவ.3க்கு பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பொன், பொருள் சேரவும் வாய்ப்புண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
தொழில், வியாபார வளர்ச்சியால் பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆனால் சிரத்தை எடுத்தே உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் ரீதியான வெளியூர்ப்பயணம் ஆதாயத்திற்கு வழிவகுக்கும். நவ.3க்கு பிறகு புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அக்.23,24ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நவ.3க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக். 25க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் இருப்பவர்கள் அலைச்சல், பணிச்சுமையைச் சந்திக்க நேரிடலாம். நவ.3க்கு பிறகு வேலைப்பளு குறையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். நவ.1,2,3ல் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும்.
கலைஞர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த போட்டி, அவப்பெயர் முதலியன நவ.8க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். அக்.25க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.
மாணவர்கள் அக்.18 முதல் நவ.3 வரை படிப்பு தவிர்த்த பிற விஷயங்களில் ஈடுபடுவது கூடாது. அதன் பிறகு போட்டி பந்தயங்ளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் அக்.25 க்குள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அக்.25க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்துடன் காணப்படுவர். மாதத் தொடக்கத்தில் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலை பார்க்கும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவியும் சிலருக்குத் தேடி வரும். அக்.25,26ல் சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 17,18,23,24,25,26, நவ.1,2,3,4,5, 9,10,13,14 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான கன்னி ராசியில் சந்திரன் அக்.27,28,29ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்: சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாத்தி வழிபடுங்கள். நாக தேவதையை புற்றுக் கோவிலில் வழிபடுங்கள். வியாழக்கிழமை ஆடை தானம் செய்வது நல்லது. துர்க்கை வழிபாடு மனத்துணிவிற்கு வழிவகுக்கும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »