நாரதர் ஒருமுறை இந்திரனைக் காண தேவலோகம் சென்றிருந்தார். அங்கு தேவர்கள் யாரும் இல்லை. வியப்படைந்த நாரதரின் கண்ணில் அகப்பட்ட முனிவரிடம், ‘தேவர்கள் யாருமே இங்கில்லையே?’ என்று கேட்டார். அவரோ ‘பூலோகத்திலுள்ள ஆயர்பாடியில் போய்ப்பாரும்’ என்று மட்டும் சொல்லி விட்டு தியானத்தில் ஆழ்ந்தார். நாரதரும் ஆயர்பாடி செல்ல பூலோகம் புறப்பட்டார். அங்கு நிகழ்ந்த அதிசயத்தைக் கண்டு மகிழ்ந்தார். ÷ காடி ஆண்டுகள் தவம் செய்தாலும் காண முடியாத கடவுளான மகாவிஷ்ணு, சிறு குழந்தை கண்ணனாகத் தன் பிஞ்சுக் கரங்களால் தாய் யசோதையை அணைத்தபடி அருகில் குப்புற படுத்திருந்தான். இந்த தெய்வீக காட்சியைக் காண இந்திர லோகமே அங்கு காத்துக் கிடந்தது. அவர்களோடு நாரத மகரிஷியும் சேர்ந்து கொண்டார். ‘என்ன புண்ணியம் செய்தனை யசோதா’ என்று நாரதர் உள்ளிட்ட அனைவரும் யசோதையை வாழ்த்தி மகிழ்ந் தனர்.