Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பலத்தில் நிகழ்த்திய அற்புதம்! என்ன தவம் செய்தாளோ?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனுபவி ராஜா அனுபவி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
03:10

*மலர்களின் மணத்தை நுகருங்கள். பறவைகளின் இனிய குரலுக்கு காது கொடுங்கள். சூரிய உதயத்தை கண்டு மகிழுங்கள். இயற்கையின் மூலம் வாழ்வின் இனிமையை அனுபவியுங்கள்.
*சந்தனம், மல்லிகை போன்ற மலர்களின் வாசனை காற்றின் திசையில் மட்டுமே நறுமணத்தைப் பரப்பும். ஆனால் நல்லவர்களின் புகழோ, காற்றையும் கடந்து நாலாபக்கமும் பரவி விடும்.
*புண்ணியச் செயல்களில் மனிதன் விரைந்து ஈடுபடவேண்டும். பாவச்செயல்களில் இருந்து மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
*அக்கறை, நற்குணம், அமைதி, பொறுமை மிக்க மனிதர்கள் எங்கிருந்தாலும் அவர்களை உலகம் போற்றி மதிக்கும்.
*பிறருக்கு உபதேசிக்கும் முன், மனிதன் முதலில் தன்னைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். சுயகட்டுப்பாடே ஒழுக்கத்தின் அடிப்படை.
*பணம், பட்டம், பதவி என எத்தனை சிறப்புகளை மனிதன் பெற்றிருந்தாலும் சிந்திக்கும் அறிவு இல்லாவிட்டால் அவை பயனற்றுப் போகும்.
*அறிவாளியிடம் நட்பு கொள்வது உறவினர்களைக் காண்பதைப் போல இன்பத்தை அளிக்கும். மூடர்களின் நட்பு பகையாளியைப் போல துன்பத்திற்கு இடம் கொடுக்கும்.
*இருதரப்பு வாதங்களையும் பொறுமையுடன் முதலில் கேட்க வேண்டும். அதன் பின் நடுநிலையோடு ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
*தனக்குத் தானே தலைவனாக மனிதன் திகழ வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகியவன் அரிய தலைமைப் பொறுப்பிற்கு தகுதி பெறுவான்.
*உண்மையை யாராலும் மறைக்க முடியாது. மேகத்தில் இருந்து விடுபட்ட நிலவு போல அது ஒருநாள் வெளிப்பட்டு விடும்.
*பொற்காசு மழையே பொழிந்தாலும், பேராசைக்காரனுக்கு மனம் அடங்குவதில்லை. அவர்கள் வேட்டைக்காரனிடம் சிக்கிய முயல் போல அங்குமிங்கும் அலைவார்கள்.
*அறிவுள்ள எதிரியைக் காட்டிலும் அறிவில்லாத நண்பர்களின் நட்பு தீமையை கொடுக்கும். இந்நிலையில் ஒருவன் தனித்து வாழ்வதே சிறந்தது.
*மூடத்தனமான சடங்குகளை விட்டொழியுங்கள். ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றுங்கள். அவசியமான சமயத்தில் மட்டும் பேசுங்கள். மற்ற நேரங்களில் அமைதியைக் கடைபிடியுங்கள்.
*அன்பும், உண்மையும் நிரம்பியதாக வாழ்க்கை இருக்கட்டும். கோபம் என்னும் நெருப்பிற்கு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது.
*விழிப்போடு இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும். துன்பம் நேரும் போது மனம் விட்டு அழுதால் மன அழுக்குகள் கரைந்து விடும்.
*நேர்மையான பேச்சு நம் மனதிற்கு மட்டுமின்றி, அதைக் கேட்பவருக்கும் சமாதானத்தை ஏற்படுத்தும். உண்மை என்பதற்காக பிறர் மனம் புண்படும் விதத்தில் பேசுவது கூடாது.
*பகையுணர்விற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பகையை பகையால் வெல்ல முடியாது. அன்பு ஒன்றே அதற்குரிய ஒரே தீர்வு.
*எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதன் தரத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதுவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
*நமக்கு மட்டுமின்றி உலகத்திற்கும் பயன் அளிப்பதாக வாழ்க்கை இருக்க வேண்டும்.  (மகான் புத்தர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar