பதிவு செய்த நாள்
25
மார்
2017
01:03
கோத்தகிரி: கோத்தகிரி பேட்லாடா மாரியம்மன் திருவிழா, 29ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 28ம் தேதி பகல், 12:00 மணிக்கு மகா பத்ரகாளியம்மன் திரு ஊர்வலம் நடக்கிறது. இரவு 12:00 மணிக்கு, சிறப்பு பூஜையுடன், கத்திகை என அழைக்கப்படும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய திருவிழா நாளான, 29ம் தேதி, அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜையும், காலை, 9:00 மணிமுதல், 2:00 மணிவரை, ஸ்ரீ தண்டுமாரியம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிவரை அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.