காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண் ணும் பணி நடந்தது. காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று, இந்து சமய அறநிலைத்துறை செயலர் அலுவலர் மதனா தலைமையில், தக்கார் சீனுவாசன், அறங்காவலர் குழு தலைவர் தோத்தாத்ரி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதில் 85 ஆயிரத்து 477 ரூபாய் காணிக்கை இருந்தது. அதில் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டு 2ம், 500 ரூபாய் நோட்டு 18ம் இருந்தது.