தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோயில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2017 12:04
தூத்துக்குடி : தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்றுவிமரிசையாக நடந்தது.
வைணவ நவதிருப்பதி தலங்களில் 7வதாக தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் கோயில் உள்ளது. இங்கு பங்குனித் திருவிழா ஏப். 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி, முகில் வண்ணன் தோளுக்கினியன், சிம்மம், அனுமார், சேசஷ உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருதலும், கருடசேசவையும் நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 5.30 மணிக்கு திருமஞ்சணம், காலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி நிகரில் முகில் வண்ணன் தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.
காலை 9 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் தக்கார் விஸ்வநாத்,செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். படவிளக்கம் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் கோயில் தேரோட்டம் விமரிசைசயாக நடந்தது.