பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
சிவகாசி;சிவகாசி கம்மவார் கல்யாண மகாலில் நடந்த யுகாதி விழாவிற்கு சிவகாசி கம்மவார் இளைஞர் சங்கம் தலைவர் பி.எஸ்.ஆர்.சோலைசாமி தலைமை வகித்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள்கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கம்மவார் இளைஞர் சங்கம் செயலர் எல்.பொன்னுசாமி வரவேற்றார். டாக்டர் வி.வாசுதேவபட்டர் பஞ்சாங்க ஸ்வரணம் யுகாதி பச்சடி விநியோகம் செய்தார்.
பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் (ஒய்வு)சென்னை ஜி.கே.துரைராஜ், கோவை ஸ்ரீனிவாசா அசோசியேட்ஸ தலைவர் ஜி.சீனிவாசன், சென்னை மாநிலகல்லூரி பேராசிரியர் சி.ஜோதிவெங்கடேஷ்வரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பேராசிரியர் கே.கேபால்சாமி, கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் என்.கெங்கம்மாள் ஆகியோர் பேசினர். சிவகாசி எஸ்.என்.எம்.மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி தலைவர் ஆர்.சுப்புராஜ், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வி.பாலகிருஷ்ணன், ஜே.பாலகங்காதரன், கம்மவார் இளைஞர் சங்கம் துணைத்தலைவர் எஸ்.திருப்பதி நாயக்கர், முன்னாள் செயலர் ரா.கிருஷ்ணசாமி,எஸ்.என்.எம்.மெட்ரி்க்பள்ளி செயலாளர் கே.ரங்கராஜீ,ஆர்.கே.ரவி, பள்ளி பொருளாளர் பி.ராஜாராம், நாயக்கர் மகமை பண்டு வர்த்தக் சங்கம் தலைவர் ராதாக்கிருஷ்ணன், வர்த்தக சங்க செயலர் கே.ராமமூர்த்தி,பொருளாளர்வி.தாமோதரக்கண்ணன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர். கம்மவார் இளைஞர் சங்கத்தின் பொருளாளர் ஜி.ராஜகோபால் நன்றி கூறினார். சித்துராஜபுரம் ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் என்.சின்னசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.