Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது ... மூலவர், உத்ஸவர் யாரை வணங்குவது அதிக பலனைத் தரும்? மூலவர், உத்ஸவர் யாரை வணங்குவது அதிக ...
முதல் பக்கம் » துளிகள்
கடன் தொல்லை அகற்றும் தீப வழிபாடு!
எழுத்தின் அளவு:
கடன் தொல்லை அகற்றும் தீப வழிபாடு!

பதிவு செய்த நாள்

17 மே
2017
02:05

இரணியன் தன் மடியில் கிடத்தி, வதம் செய்யும் திருக்கோலத்தில் நரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை, தட்சிண அஹோபிலம் என்று போற்றுவர். வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் நரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன், அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும் காட்சி தருகின்றனர். சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு, சிறப்புத் திருமஞ்சனத்தோடு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. நரசிம்மரைச் சாந்தப்படுத்த, பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். பானகமும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபட்டால், இழுபறியான வழக்குகள். திருமணத் தடை, நோய், பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் ஆகிய அனைத்துக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்குமாம். கோயிலின் அருகிலேயே உள்ள நரசிம்ம தீர்த்தமும் மகத்துவம் வாய்ந்தது!

வழிபடுவது எப்படி?

பதினாறு கரங்களுடன் கூடிய கீழப்பாவூர் நரசிம்ம மூர்த்தி சிறந்த வரப்பிசாதி. செவ்வாய்க்கிழமைகளில் இந்த ஸ்வாமியைத் தரிசிப்பதுடன், நீராஞ்சன தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது விசேஷம். அதாவது, தாம்பூலத் தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் நெய் நிரப்பி, தீபம் ஏற்றி வைத்து 16 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் நீங்கும். சுவாதி, செவ்வாய்க்கிழமைகள் மட்டுமின்றி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள், நரசிம்ம ஜயந்தி, பிரதோஷ தினம் ஆகிய நாள்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது?

திருநெல்வேலி - தென்காசி சாலையில், சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கீழப்பாவூர்.

 
மேலும் துளிகள் »
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar