ஒவ்வொரு வருடமும் சித்திரை (சைத்ர) மாதம் பவுர்ணமி நாள் அன்று நிறைவடையும் உற்சவமாக மூன்று நாட்கள் நடைபெறும் வருடாந்திர உத்ஸவமே வஸந்தோத்ஸவம். சித்திரை மாதம் சுக்ல பக்ஷ த்ரையோதசி அன்று காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமியை கோயிலின் தென்மேற்கு பகுதியில் அமைந்த வஸந்த மண்டபத்திற்கு எழுந்தருளப் பண்ணி அபிஷேகம், நைவேத்தியம் ஆஸ்தானம் நடத்துவர். இரண்டாம் நாள் மலையப்ப ஸ்வாமிக்கு தங்கத் திருத்தேர் உத்ஸவம் நடைபெற்ற பின்னர் வஸந்த மண்டபத்திற்கு ஸ்வாமியை எழுந்தருளப் பண்ணி அபிஷேகம் நைவேத்தியம், ஆஸ்தானம் நடத்துவர். மூன்றாம் நாள் மலையப்ப ஸ்வாமியுடன் வெவ்வேறு பல்லக்கில் ருக்மிணி கிருஷ்ணர், சீதாராம லக்ஷ்மண ஸ்வாமிகளும் திருவீதி வலம் வந்து வஸந்த மண்டபத்தினை அடைந்து, வஸந்தோத்ஸவத்தில் பங்கு பெற்று, அன்று மாலை கோயில் திரும்புவார்கள். இவ்வுத்ஸவத்தில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியம் சித்திக்கும்.