தேவிபட்டினம் நவபாஷாண தீர்த்தத்தில் கட்டப்பட்டுள்ள நடை பாதை சேதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2017 11:09
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அருகே தேவிபட்டினம் பகுதியில் நவபாஷாண தீர்த்தம் பகுதியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள நடை பாதை சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினத்தில் நவபாஷாண தீர்த்தம் உள்ளது. கடலில் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. கடலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், இப்பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்காக கான்கிரீட்டாலான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் நீரில் இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் நடை பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தீர்த்தம் பகுதிக்கு வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரத்திற்கும் குறையாமல் வருகை தருகின்றனர். இந்த தீர்த்தத்தில் தோஷங்கள் உள்ளவர்கள் பரிகார பூஜை செய்து, சங்கல்ப பூஜையும் செய்து வருகின்றனர். இதற்கென குறைந்த கட்டணத்தில் இந்து சமய அறநிலையத்தினர் வசதி செய்துள்ளனர். கடல் பகுதிக்கு செல்லும் நடை பாதைகள் பல இடங்களில் சேதமடைந்து, அபாய நிலையில் உள்ளன. கடல் நீரின் காரணமாக உப்புக்களால் கட்டுமானங்கள் அரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் சுற்றுலா, பரிகார பூஜைக்கு வருகை தருபவர்கள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அபாயமாக உள்ள பகுதியில் சீரமைப்பு செய்து பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.