பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
வெள்ளை மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் குரு, செவ்வாய் நற்பலன் கொடுப்பர். அதோடு அக்.27க்கு பிறகு புதன் நன்மை கொடுப்பார். சுக்கிரன் நவ.3-ல் இடம் மாறினாலும் அவரால் நற்பலன் உண்டாகாது. குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும். செவ்வாயால் பொருளாதார வளம் பெருகும். பகைவர் தொல்லை நீங்கும். ஆடை, -ஆபரணம் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலமான காலம்.
குடும்பத்தில் புதனால் பிரச்னையும் கணவன், -மனைவி இடையே கருத்து வேறுபாடும் உருவாகலாம். அக்.27-க்கு பின் நிலைமை சீராகும். குடும்பத்திற்கு தேவையான வசதி தாராளமாக கிடைக்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணம், புதுமனை புகுதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். அக்.30,31-ல்உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.10,11-ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.3,4-ல் சகோதரர்கள் உறுதுணையாக செயல்படுவர்.
பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டை விலகும். அக்.27க்கு பிறகு பொருளாதார வளம் பெருகும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலம் தரும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்.17,18, நவ.14,15-ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நவ. 1,2,5,6-ல் சந்திரனால் சிறு தடை குறுக்கிடலாம்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். குருபகவானால் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. அதிகாரிகளின் ஆதரவு வளர்ச்சிக்கு துணைநிற்கும். எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். தனியார்துறையில் பணிபுரிபவர்கள் புதன் சாதகமற்று இருப்பதால் பணிச்சுமைக்கு ஆளாக வாய்ப்புண்டு. அக்.27-க்கு பிறகு நிலைமை சீராகும். அக். 28,29- ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.
கலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் உண்டாகும். விடாமுயற்சி இருந்தால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். நவ.12,13-ல் மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும்.
மாணவர்கள் மாத தொடக்கத்தில் சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அக்.27-க்கு பிறகு கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை உருவாகும். ஆசிரியர்களின் அறிவுரை உதவிகரமாக இருக்கும்.
விவசாயிகள் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கேழ்வரகு, சோளம், கம்பு, தினை போன்ற பயிர்கள் மூலம் மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். தடைபட்ட திருமணம் இனிதாக நிறைவேறும். நவ. 7,8,9 ஆகிய நாட்கள் அனுகூலமானதாக அமையும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். அக்.20,21,நவ.16-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்.27-க்கு பிறகு தனியார் துறையில் பணி புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.
* நல்ல நாள்: அக்.18, 19, 20, 21, 27, 28, 29, 30, 31, நவ.3, 4, 7, 8, 9, 14, 15, 16
* கவன நாள்: அக்டோபர் 22,23,24- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: மஞ்சள் சிவப்பு
* பரிகாரம்:
● ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்
● வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை
● சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை