* உள்ளத்தில் அன்பு இருந்தால் வீடும், நாடும் அழகு பெறும். அப்போது ஆனந்தத்திற்கு குறைவிருக்காது. * ஒருவரிடமும் பகைமை பாராட்டாமல் இன்முகம் காட்டினால், அது உலகையே உங்கள் வசப்படுத்தி விடும். * கடமையை உணர்ந்து அதற்குரிய காலத்தில் செய்தால் உள்ளத்தில் அமைதி நிலைக்கும். * உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு. * உணர்ச்சிவசப்பட்டு மனம் போன போக்கில் செயல்படுவது நல்லதல்ல. அறிவு காட்டும் வழியில் செயல்படுவதே ஆன்மிக உயர்வு தரும். * எண்ணம், சொல், செயல் மூன்றின் ஆற்றலுக்கும் விளைவுண்டு. இதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. * முறை தவறி செய்யும் செயலின் விளைவு, துப்பாக்கி குறி தவறி வெடிப்பது போன்றது. * வஞ்சகர் எதிரியாய் வந்து விட்டால் வியப்பில்லை; நண்பராய் வளர்ந்தால் பெருந்தொல்லை. * வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வை கெடுக்கும். * ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை, தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது. லட்சியம் இல்லாத ஆராய்ச்சி, கதவு இல்லாத வீடு போல் ஆகும். * வாழ்த்து ஒருபோதும் வீண் ஆகாது. வாழ்த்து சொல்ல, சொல்ல உடலும், மனமும் நன்றாக இருக்கும். நம்மை சுற்றிலும் நல்ல அலை இருந்து கொண்டே இருக்கும். * ஒழுக்கத்தின் மூலமே வாழ்வில் உயர்வடைய முடியும். இந்த ஒழுக்கத்தை பாதுகாக் கும் கவசமே திருமணம். * பகைமையை வைத்து கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும் போது பகைமை இருக்காது. * தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. தீர்க்கும் வழியை தீர்க்கமாக அறியாதவர்களே இருக்கிறார்கள். * கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. ஒருவேளை அவர் நமக்கு பயந்து கொண்டிருக்கலாம். ஆனால் திருந்தியிருக்க மாட்டார். * எந்தசூழ்நிலையிலும் ஒருவருக்கு கோபம் வரவில்லை என்றால், அவர் ஞானம் பெற்று விட்டார் என்று அர்த்தம். * விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால், அதுவே மேன்மை அடைவதற்கான வழி. வழிகாட்டுகிறார் வேதாத்ரி மகரிஷி