பதிவு செய்த நாள்
18
ஏப்
2018
10:04
காலடி: ஆதிசங்கரர் பிறந்த கேரளா எர்ணாகுளம் அருகிலுள்ள காலடியில் திருக்காலடியப்பன் என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது. இந்தாண்டு, ஏப்.,16ல் யாகம் துவங்கியது. ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் வகையில், 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்தினர். லட்சுமி ய ந்தி ரமும், தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகள் வைத்து, 10008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்பட்டது. அட்சய திரிதியை முன்னிட்டு இன்று (ஏப்.,18) காலை கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு பின் காலை 9 மணிக்கு தங்க நெல்லிக்கனிகளால் விஷ்ணு, லட்சுமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏப்., 20ல் ஆதிசங்கர ஜெயந்தியுடன் விழா நிறைவடைகிறது. தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் பிரசாதமாக கோயிலில் விற்ப னை செய்யப்படுகிறது. தொடர்புக்கு: 93888 62321.