பதிவு செய்த நாள்
26
மே
2018
09:05
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று(மே 26)ல் முதல் வரும், 28 வரை, 1,008 கலச பூஜை நடக்கிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, இறை வனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், கடந்த, 4 முதல் தாரா அபிஷேகம் நடந்து வரு கிறது. தினமும் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் ஊற்றப்படுகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் வரும், 28ல், நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று(மே 26)ல் காலை, 7:15 மணிக்கு கணபதி பூஜையுடன், முதல் கால 1,008 கலச பூஜை நடக்கிறது. 28ல், நான் காவது கால கலசபூஜை நடக்கவுள்ளது. அன்று இரவு சுவாமி வீதியுலா நடைபெறும்.