பதிவு செய்த நாள்
16
ஜூன்
2018
12:06
ஈரோடு: ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சுதர்சன ஹோமம், வரும், 20ல் துவங்குகிறது. அன்று காலை, விஷ்வக்சேன ஆராதனத்துடன், விழா துவங்குகிறது. இதை தொடர்ந்து லட்ச ஆவர்த்தி ஹோமம், சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை, 5:30 மணிக்கு கோபூஜை, சுப்ரபாதத்தை தொடர்ந்து பல்வேறு பூஜை நடக்கிறது. 22ல் காலை, 7:00 மணிக்கு ஒரு லட்சத்து, எட்டு ஆவர்த்தி ஹோமம் பூர்த்தி அலங்கார பூர்ணாஹூதி, கலச புறப்பாடு நடக்கிறது. இதை தொடர்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.